Thursday, March 24, 2016

முட்டாள் பாரதி........!

அன்று...!

உன்னை கவியாக பார்த்தவன்
கவிஞனாகினான் ..!

உன்னை வீரனாக பார்த்தவன்
மாணவனாகினான்...!

உன்னை சாமியாக பார்த்தவன்
பக்தனாகினான்...

உன்னை சின்னசுவாமியக பார்த்தவன்
பாரதியாகினான்...!

ஆனால் இன்றோ...!

நீ எழுதிய கவிதை
யாவும் வார்தையாகின..!

நீ கண்ட கனவு
யாவும் கற்பனையாகின..!

நீ பார்த்த பூனைகள்
யாவும் நிறம் மாறின...!

காரணம்...!

உனக்கு நடிக்க தெரியாது...!

இங்கு படித்த அறிவுமிகுந்த பலர்

இன்று உன் பிறந்த நாள் என்பதைவிட
நாளை ரஜினியின் பிறந்தநாள்
என்பதைபற்றியே யோசனை...!

நாட்டின் வரலாற்றில்
இடம்பிடித்த உனக்கு...!

நாட்டு மக்களின் வாழ்கையில்
இடம் பிடிக்க தெரியாத
நீ முட்டாள் பாரதி ...!

மடமையில் மயங்கிக்கிடக்கும்
மடயர்களிடம் மல்லுக்கட்டும்
நான் முட்டாள்...!

பா.பரத்...!

பலி வாங்க காத்திருக்கும் கம்யுனிசம்

நாட்டிற்க்கு வெளியே
உணர்வுக்கொலை..!

நாட்டிற்க்கு உள்ளே
உணவுக்க்கொலை..!

அது நமக்கு தீவிர வாதம்...!
இது நமக்கு தீராத வாதம்...!

அரசியல் வாதிகளிடமும்
அரசுடை வாதிகளிடமும்
நான் வேண்டுவது ஒன்றுதான்...!

உலகை திருத்தும் முன்
உன்னை நீ திருத்திக்கொள்...!

இன்னொருவள் மகனை
கொல்லும் முன்
ஒரு நிமிடம்
யோசித்துக்கொள்(ல்).....!

உனக்கும் ஒரு தாய்
இருக்கிறாள் என்று...!

அவர்கள் பெற்றோர் அழுவது போல்
உன் பெற்றோரும்
ஒருநாள் அழுகக்கூடும்...!

தமிழன்...!
இனம் அழிந்தாலும்

இந்தியன் என்ற உணர்வு மறைந்தாலும்...!

நின்றுகொண்டிருப்போம்
மனிதநேயம் மிக்க கம்யுனிசம்
என்ற கருவியை தாங்கியபடி...!

நாங்கள்
இணைந்திருப்போம்
இருக்கும் வரை அல்ல
இறக்கும் வரை...!

யோசித்து செயல்படு...!

உன் தாய் அழாமல் பார்த்துக்கொள்...!

மீண்டும் ஒரு புதிய புத்தாண்டு

கண்களில்
கண்ணீருடன்
2015 ஆம் ஆண்டை
வரவேற்றது 2014...!

சென்ற ஆண்டில்
செய்த தவறை
மன்னித்து...!

வந்த ஆண்டை
வருத்தமின்றி
வாழ்வாயாக...!

வாழ்வில்
எது வந்தாலும் சரி
ஏமாற்றம் தந்தாலும் சரி...!
எதிர்த்து நில்...!
நம்பிக்கையுடன்....!

ஒருபோதும் நிற்காதே
நான் என்ற கர்வத்தோடு
நில் நாம் என்ற உணர்வோடு...!

முடிந்தவரை சேர்த்திடு...!
புன்னகையை
பொன் நகையை அல்ல...!

பெருமைகொள்
பாசத்திற்கு அடிமை என்று
பணத்திற்கு அல்ல...!

புது முடிவுகள் பலயெடுத்து
புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும்
நீங்கள்...!

முடிந்தவரை உதவி
செய்யுங்கள்
முடியாதவர்களுக்கு...!

இந்த ஆண்டு
இனிய ஆண்டாக
அமைய என் வாழ்த்துக்கள்...!

 பாமரன் பா.பரத்

பட்டம் பெற்ற முட்டாள்கள்

சிங்கங்களிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?

சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் சிங்கம் என்றது...!

நாய்களிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?

சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் நாய் என்றது...!

கழுதைகளிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?

சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் கழுதை என்றது...!

பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன்
பிறப்பால் நீ யார் என்று...?

சிரித்தபடி..!
பிறப்பால் நாங்கள் பன்றி என்றது...!

மனிதர்களிடம்
பிறப்பால் நீ யார் என்றேன்...?

ஒருவன்
பிறப்பால் நான் இஸ்லாம் என்றான்...!

மற்றொருவன்
பிறப்பால் நான் கிறிஸ்துவன் என்றான்...!

வேறொருவன்
பிறப்பால் நான் இந்து என்றான்...!

அட படித்த மடையர்களா
பிறப்பால் நாம் அனைவரும்
மனிதனடா மனிதன்...!

பிறப்பால் நாம்
மனிதன் என்பதையும் மறந்து..!

வாழும் வாழ்கையில்
மனிதநேயத்தையும் மறந்து...!

மதநேயம் நேயத்தோடு
வாழும் மானங்கெட்ட மனித இனம்

மிருகத்துடன் ஒப்பிடக்கூட
தகுதி இல்லாதவன்....!

இனி பிறக்கும் உயிர்களுக்காவது
நாம் மனிதன் என்பதயும்
மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்பத்தையும்
கற்றுக்கொடுங்கள்...!

பட்டம் பெற்ற முட்டாள்களா...!

உங்களிடம்
பகுத்தறிவு இல்லாவிட்டாலும் சரி
பகுதி அறிவோடாவது
செயல்படுங்கள்....!

இந்த உலகம்

சொர்கமாக மாறும்...!

தனிமனித ஒழுக்கம்

நல்ல வேலை
நல்ல சம்பளம்
ஆடம்பரம் இல்லாத
அளவான வாழ்க்கை...!

வார இறுதியில்
ஊரை சுற்றி சுற்றுலா...!

சொந்தங்கள் இல்லாவிட்டாலும்
சொல்லிக்க ஒரு சொந்த வீடு..!

இவைதான் இன்றைய வாழ்வின்
இன்றியமையாத தேவைகள் என்கிறார்கள்
இயந்திரமாய் வாழும் பலர்...!

ஒன்பது மணிக்கு வேலை..!

மகிழுந்தில் செல்பவன்
இருசக்கர வாகனத்தில் செல்பவனை
மதிப்பதில்லை

இருசக்கர வாகனத்தில் செல்பவன்
பேருந்தில் செல்பவனை மதிப்பதில்லை

பேருந்தில் செல்பவன்
நடந்து செல்பவனை மதிப்பதில்லை

நடந்து செல்பவனோ
மகிழுந்தில் வருபவனை மதிப்பதில்லை..???????

ஏனென்று கேட்டால்...!
இருவரும் கூறும் ஒரே பதில்

"அவன் என்ன மதிக்கல"...!

மொத்தத்தில் எவருமே
அவரவரையும் மதிக்கவில்லை
பிறரையும் மதிப்பதில்லை
அதுவே உண்மை...!

இப்படிப்பட்ட ஒழுக்கமான எந்திரத்திடம்
மனித ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது

என்னை மடையன் என்று
மீண்டும் ஒருமுறை உணரவைக்கிறது...!

ஆனா இதெல்லா எப்படி வந்துச்சு....?

பனிரெண்டு வருடம்
படிச்ச படிப்பு
கல்லூரிக்கு பயன்படல...!

கடன்வாங்கி கல்லூரியில் படிச்ச
பட்டப் படிப்பு வேலைக்கு பயன்படல...!

ஒழுக்கமா படிக்கலையா?
இல்ல
ஒழுக்கமா சொல்லி தரலையா....?

இது
இலவச கல்வியா????
இழிவான கல்வியா?????

ஒழுக்கமா வேலைக்கு போகனுன்னு
பொறுப்பா வேலைக்கு போனவனுக்கு....!

வேலை கிடச்சது
வாங்கிய பட்டத்திற்கு இல்ல
கொடுத்த பணத்திற்கு...!

நீ வேலைக்கு ஆள் எடுக்கிறாயா ??????
பணத்திற்கு ஆள் எடுக்கிறாயா ????????

ஓட்டுனர் உரிமம் வாங்கியும்
வண்டி ஓட்டி பழகல...!

ஓட்டுனர் உரிமம்
ஓட்டிபழகியவர்களுக்கா ?????
ஓட்டிபழகுபர்களுக்கா ?????????

வேகமா போகும் வண்டிய
வணிக சந்தைல வித்துட்டு...!

வேகத்தடை சட்டம்போடும்
அமைச்சர்கள்...!

வண்டி
மக்களுக்கா??????
வியாபாரத்திற்கா??????

வேகமாய் வந்தவனை
வெக்கமே இல்லாம
காசவாங்கிட்டு விட்டுவிடும்
காவல்துறை...!

சட்டம்
திருந்தவா ????
திருடவா ?????????


மணிக்கு 60 கி.மீ வேகம் செல்லும்
வாகனத்தை கையில் கொடுத்துவிட்டு
40க்கு மேல போகாதப்பா என்று சொல்லும்
அப்பாக்கள் தான் இங்கு அதிகம்...!

கேட்டா பாசம்னு சொல்றாரு...!

இது
பாசமா?
பெருமையா ???

தனி மனித ஒழுக்கத்தை பேசுபவன்
பிறரை குறை கூறமாட்டான்...!
தன்னைத் திருத்திக்கொள்வான்...!

உங்களை குறை கூறும்முன்
திருந்திகொள்கிறேன்...!

பின்னர் திருந்தாதவர்களை

கொல்கிறேன்....!

படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...!!!

பசித்தவரெல்லாம் ருசித்திருக்க
பாவம் என் பாமரன்
பசியில்நிற்கிறான்
ஒரு ஓரமாய்...!

பணம் படைத்தவன்
"ஒன் மோர்என்று கேட்டதால்.

இவனுக்கும் சேர்த்து
அவன் தின்கிறான்..!

அவனுக்கும் சேர்த்து
இவன் உழைக்கிறான்...!

இவன் உழைப்பிற்கும் சேர்த்து
அவன் சம்பாதிக்கிறான்...!

அவனுக்கும் சேர்த்து
இவன் வரி செலுத்துகிறான்...!

வந்த சலுகைகளை
பாதிய கொடுத்தாக்கூட
பரவாயில்ல பாவி

முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா
முடியாதவங்கர போர்வையில...!

காரணம்.......??

கூட்டமாகவும்,சத்தமாகவும்
சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்...!

இது படிக்காத பன்றிகளுக்கு
தெரிஞ்சிருக்கு...!

அங்கங்க கூட்டம் போட்டு
அவசியமில்லாதத கத்தி கத்தி
சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க..!

படிக்காத பாட்டளிக்கு தெரியல
படிச்ச பட்டதாரிக்கு தெரியல
பண்ணி கத்தறத பாவமா
பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்..!

சிலர் வேடிக்கையாக பார்க்கிறார்கள்...!

பாமரன்..பா.பரத்

நண்பா கவனம்

மது மாது
இவர்கள் இருவரும்
இருசக்கர வாகனத்தில்
எதிரிகள்....!

பயணத்தின் பொது
இருவரையும் தீண்டாதே
பின் வீடுதிரும்புவது சிரமம்...!
எனவே நண்பா கவனம்...!

சாலை விதிகளை
மதிப்பவர்களை விட,
மீறுபவர்கள் தான் அதிகம்....
எனவே நண்பா கவனம்...!

வேகமாய் முந்துபவனிடம் ,
நியூட்டனின் மூன்றாம் விதியை
பயன்படுத்தாதே...

பின் அது உன் விதியை
முடித்துவிடும் அதே விதிப்படி.....
எனவே நண்பா கவனம்...!

நமது சாலைகளில்
இரண்டு கால்கள்
கொண்ட கால்நடைகள்
அதிகம்....
எனவே நண்பா கவனம்...!

இரவு 10 மணிக்கு மேல்,
சாலைகளில் நடுவே
தவழும் சகோதரர்கள் அதிகம் ....
எனவே நண்பா கவனம்...!

வாகனத்தின் நகழ்களின்
கோப்பை எப்போதும் வைத்திரு,
ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும்
கொள்ளையர்களிடமிருந்து உன்னை
பாதுகாக்கும்...!
எனவே நண்பா கவனம்...!

கவலைகளை வீட்டில் வை
கவனத்தை சாலையில் வை

ஆசை முத்தத்துடன் வழியனுப்பிய தாரம்
அக்கறையோடு பாத்து போப்பா என்ற தாய்
அன்போடு டாட்ட சொன்ன பிள்ளை,

இவர்கள் காத்திருப்பது
உன்வருகக்குத்தானே தவிர,
உன் பிணத்தின் வருகைக்கு அல்ல...!


எனவே நண்பா கவனம்...!

என் வாழ்வில் பெண்கள் பல

காதலியர் என்று
என்னல் வேண்டாம்..!

எனக்காக காத்து நின்றவர்கள்
என்றே பொருள்படும்..!

என் தாயிர்கே என்னை
அறிமுகம் செய்த செவிலியர்..!

என் தந்தைக்கு என்னை
அறிமுகம் செய்த தாய்..!

நானே எனக்கு அறிமுகம்
செய்துகொண்ட என் தங்கை..!

எனக்கே என்னை
அறிமுகம் செய்த
ஆசிரியை..!

அவளுக்கு என்ன
அறிமுகம் செய்துகொண்டு
என்னை அறிந்து கொண்டவள்
என்னவள் :-)

நாம் அறிமுகம் செய்து கொண்டோம்
அறியாதவர்களாய்...!

அறிந்து கொண்டோம்
அன்பு அண்ணனாய்..!

கல்லூரியில் பிரியா விடைபெற்றோம்
கண்களில் கண்ணீரோடு..!

காலம் கரைந்தது..!

கடந்தவை யாவும் மாறிட,
மாறாமல் நிற்கிறது
என் அன்பு தங்கைகளின்
அன்பு..!

என் தாய் வயற்றில்
நீ இல்லை,

உன் தாய் வயிற்றிலும்
நான் இல்லை..!

இல்லை என்றது இல்லாமல் போக
இருக்கிறது நம் உறவு..!

என் அன்பு தங்கைகளுக்கு

அண்ணனின் வரிகள்..!

வாழ்வு சுகமானது

முகமறியா மழலையின் 
முத்தம் சுகமானது...!

முகவரி அறியாதவனின்
உதவி சுகமானது...!

மலை பாதை
பயணத்தின்
மழை சுகமானது...!

பேருந்துக்கு சில்லறை
போதவில்லையென்றாலும்
பேதையாய் பேசிக்கொண்டே
வீடுதிரும்பியபோது
வறுமை சுகமானது ....!

ஊடலின்றி
ஒரே படுக்கையில்
பலர கூடியுரங்கியபோது
நட்பு சுகமானது...!

நண்பனின் தங்கை
தன்னையும் அண்ணா
என்றழைப்பதும் சுகமானது...!

நண்பனின் காதலியை
உரிமையோடு தங்கை
என்றழைப்பதும் சுகமானது...!

அத்தங்கையின் செல்ல
புகார்களை நாட்டாமை
செய்வது சுகமானது..!

உன் மனைவி
வந்ததும் பார்க்கலா
என்ற தாயின்
கேலியும் சுகமானது...!

காதலை புரிந்துகொண்ட
தந்தையின் புதிர்
பேச்சும் சுகமானது...!

எத்தனை கேலிசெய்தாலும்
சண்டையே போட்டாலும் ...

வெளியே செல்லும்போது
"பார்த்து போ "என்கிற
அனைவரின் அன்பு சுகமானது ..!


மொத்தத்தில் வாழ்வு சுகமானது ....!