Monday, May 23, 2016

ஓர் நாள் இரவு...

நிலவிற்காக
தன் சிறகை
விரித்தது
வானம்.....!

சிறகின்
நிழலில்
தங்களையும்
இணைத்தன
நட்சத்திரங்கள்.....

குளிர்
தென்றல் பட்டதும்
வெட்கத்தில்
மலர்ந்தன
பூக்கள்.....!

தன்
துணை தேடி
அகவியது
மயில்.....!

அனைத்தையும்
மறக்கச்செய்தது
என் கன்னத்தில்
உன் இதழ்
பதித்த

முத்தம்......!


 - வினோத்