Saturday, September 24, 2016

ஆடை-நிர்வாணம்


பழமை மறந்து,
பண்பாடு மறைத்து,
அரைகுறை ஆடையணிந்து,
ஆடை-நிர்வாணமாக,
வீதியில் செல்லும்,
சில பெண்களுக்கு !

நீங்கள் சுதந்திரம் கேட்பது
ஆண்களிடமிருந்தா ?
ஆடையிடமிருந்தா ?
ஆண்களிடமிருந்து என்றால்
ஆடையை கூட்டச் சொல் !

ஆடையிடமிருந்து என்றால்
தூக்கில் தொங்கச் சொல் !





ஆடைகளைந்து பெண்ணுடலை
பார்க்கத்துடிக்கும் ஆண்கள் சிலரே உண்டு !

ஆடையனிந்து உடல்காட்டும்
பெண்ணுடலை குருடர் அல்லாத
எவரும் தீண்டுவர் !

என் பாட்டான் தொண்டு செய்து,
பழுத்த பழம் இன்று இருந்திருப்பின்,
இத்தீண்டாமையை விரும்பியிருக்கக்கூடும் !

அன்று,
வீட்டிலிருந்த பெண்களை
வெளியே வரச்சொன்னான் பாரதி !

இன்று,
வெளியே சென்ற பெண்களை
வீட்டிற்கு உள்ளே செல்ல அழைக்கிறேன்
நான் பா.பரத்