உன்னப்ப(ன்+அ)ம்மா நான்....
என் மகளே !
என்னை நல்ல மகனாக்கியது
உன் தாயின் காதல்..!
என்னை நல்ல மனிதனாக்கியது
உன்னின் காதல் ..!
நான் எதையோ தேடிசெல்லையில்
என்னை தேடி வந்த அழகு
தேவதை நீ.!
தோல்வின் வலியுனர்ந்தவன்,
தைரியமாக செல்
உன் பின்னே நானிருக்கிறேன்..!
காதல் தோல்வியின் வலியுனர்தவன்
உன் காதலுக்கு நானே தூது செல்வேன்..!
சுதந்திரத்தின் ருசி அறிந்தவன்
சுதந்திரமாக பறந்து செல்,
உன் பார்வையில்
நானில்லைஎன்றாலும்
என்பார்வையில்
நீயிருப்பாய்..!
பாசத்தில்..!
வெற்றியின் தாகம் தணிந்தவன்
தயங்காதே முன்னேறு, வெற்றி உனக்கு
மிக அருகில்தான் உள்ளது
என்னைப்போல..!
உன்தாயின் ஆசைகளை
அரை நொடியில் நிவேற்றியவன்..!
பெரிதாய் ஆசைப்படு
உனது ஆசைகளையும்
நிறைவேற்றுவேன்..!
என்னவளை கொஞ்சும் போதும் சரி
என்மகளை கொஞ்சும் போதும் சரி
சமுதாயத்தின் பார்வை மாறியதே இல்லை..!
வேடிக்கையான மனிதர்கள்
வேடிக்கை தான் பார்ப்பார்கள்
அரர்களை பார்த்து ஐயம் கொல்லாதே
என் கவலை மறக்க ஒரு முத்தம் கொடு..!
உனக்காக எதையும்செய்ய
துணிந்தவன் உன் தகப்பன்
துணைவியை கண்டு பயப்படுவதை
கேலி செய்யாதே..!
அவள் என் முதல் குழந்தையம்மா..!
முத்தமிடுகையில் உன் தாய்
சொல்லி கேட்காத நான்
இன்று உனக்காக..!
மீசையில்லாமல்..!
ஒரு மார்பில் உன்னையும்
மறு மார்பில் உன்னன்னையும்
சுமப்பது சுமைதாநென்றாலும்
சுகம்தான்...!
அற்புதமான வாழ்வில்
ஒரு அங்கமாக நான்
உன் அப்பன்...
பாமரன் பா.பரத்
காதலுடன் பா.பரத்
காதலுடன் பா.பரத்
No comments:
Post a Comment