Tuesday, November 22, 2016

காதல் செய்தேன்.













காதல் செய்தேன்.
கற்புள்ள கன்னியரை
மட்டும் அல்ல...

மெரினா கடற்கரையில்
நடப்பது போல் சாலையில்
என்னை கடந்து செல்லும்
கிழவியை - காதல் செய்தேன்.

வேகமாய் என்னை கடந்து 
சட்டென்று  வாகனத்தை நிறுத்தி
நாய்குட்டிக்கு வழிவிட்ட
நண்பரை -காதல் செய்தேன்.

என் முகம் அறியாமல்
புன்னகை செய்யும் மழலையின்
இதழ்களை -காதல் செய்தேன்.

வேகத்தடையில் ஏறி இறங்கும்
ஒரு நொடியில் என்னை
முந்திச்சென்ற மிதிவண்டி
சிறுவனை -காதல் செய்தேன்...

நிறுத்தம் வந்ததும்
இருக்கையில் அமர்ந்திருந்த
முதியவர் இறங்கும்முன்..
நீ உக்காருப்ப !!! என்றார்
அவரையும்  -காதல் செய்தேன்.

நான் வாங்கிகொடுத்த
பனிக்குழைவை சாப்பிடத்தெரியாமல்
என் மேல்சட்டையில் கொட்டிய
என்மகளை – காதல் செய்தேன்.

அருகில்!!
அவள் வாயை பார்த்துகொண்டிருந்த
அவள் வயதுடைய வேறொருவர்
மகளையும் - காதல் செய்தேன்.

வேறொரு பனிக்குழைவை
கையில் கொடுத்து....

காதல் செய்
எல்லாவற்றையும்
காதல் செய்....

சுவாசிக்க மறந்து
சுடுகாடு செல்லும் வரை
காதல் செய்..!!!

சுடுகாட்டிற்கு பின்
சொர்க்கம் வருமா
என்று தெரியாது...

கா-த-ல் செ-ய்
நீ சாகும் முன்னரே
சொர்கம்  காணலாம்...



காதலுடன்,
பாமரன் பா.பரத்

Friday, November 11, 2016

என்னவள் நீ...


எண்ணிலடங்கா
எண்ணங்கள் பல
என்னுள்
இருக்கையில்...

என்னைமறந்த
நிலையிலும்
என்னவள் நீ...

நினைவுகளாக !!


பா.பரத்

Saturday, November 5, 2016

ஆடம்பரக்கொலை....












காலையில் என் துயில் 
கலைக்கும் குருவி.

இன்று கவலையுடன் 
தத்தளிக்கிறது தெருவில்
தன் தாயுடன்..!

குருவிக்கோ கூடில்லை
எனக்கோ உறவில்லை..!

பசித்தபோதெல்லாம்
எனக்குணவளித்த
என்கிழவியை இன்று
 
காலையிலிருந்து
காணவில்லை..!

தொண்டை வரண்டபோதெல்லாம்
இளநீர் வெட்டிக்கொடுக்கும்
நரை கிழவனும் இன்றில்லை..!

அமைதியின்றி
அமைதியான
 
சாலையில் தனியே
 
செல்லும்போது
என்னை கட்டித்தழுவிய
என்காதலும் இன்றில்லை...!

ஞாயிறு என்னை சுட்டெரிக்கையில்
என்னை அரவனைத்துக்கொண்ட
என்னன்னையும் இன்றில்லை..!

சாலையில் சொல்லும்போது
இருபுறமும் நின்றிகொண்டிருந்த
 
என் உறவுகள் யாரும்
 இன்றில்லை...!

ஆம், 
எல்லாம் முடிந்தாயிற்று
வெட்டியும் வீழ்த்திவிட்டார்கள்
வித்தும் தின்றுவிட்டார்கள்..!

உயிரிழந்தும் காத்திருகிறது..!

மானம்கெட்ட மானுடர்
சமூகத்திற்கு உதவிட....!

வெட்டியபின் பேசுவதில் அர்த்தமில்லை
வெட்டிப்பேச்சில் மதிப்பில்லை
பணம் பேசுகையில் மறுப்பில்லை..!
இதுவே என் சமூகம்...!

தடுக்க நாதியின்றி
மரமென்றோயிரை
வெட்டிவீசியபோது
வெட்கமேயின்றி
வெடிகைப்பார்த்த
உங்களில் ஒருவன்
நான்..

பாமரன் பா.பரத்..!