Saturday, April 9, 2016

காதல் பரிசு



















காதலியுடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும்
என்று ஒருதலை காதலில் மட்டும் அல்ல !!!!!

முதல் சந்திப்பில் மனம்நெகிழ்ந்து
தோழமையின் பின்சென்று,

அவன் மனதை அவளும்
அவள் மனதை அவனும்,

நன்கு புரிந்து கொண்டு
பின் ஒரு நாள் தன்னை அறியாமல்,

கண்களில் வெட்கமும்
இதலில் புன்னகையும்
மனதில் படபடப்புடன்
காதலை பரிமாறி,

பின் குடும்ப உறவுகளை பற்றி பரிமாறி
ஒரு நிமிடம் கூட உன்னை பிரிய மாட்டேன்
என்று அன்பின் எல்லையை தொட்டு,

மேடை இல்லை
மந்திரம் இல்லை
நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை,

திருமணத்திற்கு சாட்சியான
மஞ்சள் தாலியும் இல்லை,
நீயே என் சாட்சி என்று கூறி
அன்று முதல் என்னை கணவா கணவா
என்று வாய் நிறைய சொல்லி
கடைசியில் இதை அனைத்தும்
கனவே என்று
என்னை விட்டு சென்றுவிட்டால் !!!!

இத்தனை சுகங்களை கொடுத்துவிட்டு
அவள் மட்டும் என்னை விட்டு சென்றுவிட்டால்,

இந்த இனிமையான சுகங்கள்
சுமை அதிகமானவை தான்
இருபினும் இதுதான் என் காதலி குடுத்த பரிசு!..

யோசித்து பாருங்கள் ஒரு நொடியுடன்
ஒப்பிடும் பொழுது

இது எவ்வளவு இனிமையானது என்று

No comments:

Post a Comment