நிற்க கூட நேரமில்லாமல்
நகர்கிறது நாட்கள்....
ஏதோ ஒரு ஓரத்தில்
நின்று கொண்டிருக்கும்
என்னவள் உன்
நினைவுகளுடன்...!
நீ என்பது நிழலாய்,
நான் என்பது நிஜமாய்,
நாம் என்பது நிவைவுகளாய்,
என்றும் என்னிதயத்தில்....!
போலியான நான்
நிஜமாய் வாழ்கிறேன்..!
பொய்யான நீ
நினைவாய் வாழ்கிறாய்...!
உயிரான நம் காதல்,
கவிதையாய் வாழ்கிறது...!
பாமரன் பா.பரத்
No comments:
Post a Comment