Thursday, September 29, 2016

என் ஒற்றை பல் கிழவி !
















சதை தொங்கிய,
தள்ளாடும் வயதில்,
தனியே நடந்து செல்லும்,
என் கிழவி !

பல்லில்லா பொக்கைகளுக்கு,
மத்தியில் ஒற்றை பல்லுடன்,
என் கம்பீரக் கிழவி !

காலத்தை கடந்து,
கைத்துணையாய் நிற்கும்,
கைத்தடியை மட்டும் நம்பி,
என் கிழவி !

அதே கிழவி,
சாலையைக்கடக்க
வேண்டுமென்று ஒரு
அசாதாரண ஆசையில் !

நடுங்கியவாறு,
நகரத் தொடங்கியது,
கிழவியின் கால்கள்!
கால்களை வாரிவிடும்
கள்வர்கள் வாழும்,
இப் பூதவுலகில் !

இடறிவிடாத
சாலைகளிருந்தும்,
கீழே விழுந்தால்,
என் பச்சைக் கிழவி!

பட்டயப் படிப்பு முடித்தும்
பாட்டியிடம் எப்படி நடந்து
கொள்ளவேண்டுமென்று தெரியாத
கல்லூரி இளைஞன் !

அவன்
வாங்கிய பட்டம்
வெறும் காகிதமேயன்று
அறிவு அல்லல் !

ஏன், எதற்கு, எப்படி !
இவை அறிவியல்,
அறிவின் ஆன்மா !

இவைமூன்றும் சிந்திக்காமல்,
ஏதோ ஒரு பாதையில்,
வேகமாய் பயணப்படும்,
என் சமகால சகோதரா !

இதை சிந்திக்கவும் !

வேகமும்,
ஆடம்பரமும்,
விஞ்ஞான உலகின்
அத்தியாவசிய தேவைகளில்
ஒன்றாகிவிட்டது !

உங்கள் வேகத்தில் வீரியம் இல்லை!
உங்கள் ஆடம்பரத்தில் அர்த்தம் இல்லை!
இதுவே நிதர்சன உண்மை !

தள்ளாடும் கிழவிக்கு
கைகொடுத்தவன் அல்ல நான் !

அவரை பயமுறுத்தாமல்,
அவர் பின்னே ஊர்ந்து சென்றவன் !
பொறுமையில் பெருமிதம் கொண்டேன்,

நான் பாமரன் பா.பரத்

Saturday, September 24, 2016

ஆடை-நிர்வாணம்


பழமை மறந்து,
பண்பாடு மறைத்து,
அரைகுறை ஆடையணிந்து,
ஆடை-நிர்வாணமாக,
வீதியில் செல்லும்,
சில பெண்களுக்கு !

நீங்கள் சுதந்திரம் கேட்பது
ஆண்களிடமிருந்தா ?
ஆடையிடமிருந்தா ?
ஆண்களிடமிருந்து என்றால்
ஆடையை கூட்டச் சொல் !

ஆடையிடமிருந்து என்றால்
தூக்கில் தொங்கச் சொல் !





ஆடைகளைந்து பெண்ணுடலை
பார்க்கத்துடிக்கும் ஆண்கள் சிலரே உண்டு !

ஆடையனிந்து உடல்காட்டும்
பெண்ணுடலை குருடர் அல்லாத
எவரும் தீண்டுவர் !

என் பாட்டான் தொண்டு செய்து,
பழுத்த பழம் இன்று இருந்திருப்பின்,
இத்தீண்டாமையை விரும்பியிருக்கக்கூடும் !

அன்று,
வீட்டிலிருந்த பெண்களை
வெளியே வரச்சொன்னான் பாரதி !

இன்று,
வெளியே சென்ற பெண்களை
வீட்டிற்கு உள்ளே செல்ல அழைக்கிறேன்
நான் பா.பரத்