Saturday, August 13, 2016

பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்






















ன்னை காத்த உடல் ,
நீ நோவது 
காணமுடியாமல்
நான் கரையும் 
தருணம்
உன்னை பிணம் 
என்றழைக்கும்
இவ்வுலகம்...

என்னுடலே பிரிந்தேன்
நான் உந்தன் உயிரே.....

பிரியம் வைத்தேன்
பிரியாதிருப்பேன் என்றேன்

எவன் அழைத்தும் செல்லாதிருந்த நான்,
எமன்  அழைத்ததால் செல்கிறேன்..

மகளே!!

நீ பிறக்கும் முன்னே
உன்னை பார்த்தவள்  நான் !


பிறந்த உன்னை பிரிகிறேன்,
பத்திரமாய் பார்த்த்துக்கொள்
உன் தகப்பனை !

நீ பிறக்கும் வரை
அவனே என் முதல் குழந்தை..!