Thursday, June 30, 2016

ஆணுறை !

ஆணுறை அணிந்து உறவு கொள்ளென்று,
அரசாங்கமும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்..!

கையுறை அணிந்து சாக்கடை சுத்தம்செய்
என்று சொல்ல ஒரு பன்றி இல்ல..!

பேசாத பன்றிகளுக்கிடையில்,
எழுதும் நாய்.


பாமரன் - பா.பரத் குமார்

Wednesday, June 1, 2016

நான் கிறுக்கிய காதல் ஓவியம்

முத்தமிட்ட மழலையின்,
எச்சில் ஈரம்  கன்னத்தில்
ஒட்டிக்கொண்டது போல்....!

உன்னிடமிருந்து விலகியும்,
நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கிறது,
காதல்....!

நான் இல்லாத நீயும் !!!
நீ இல்லாத நானும் !!!
நாம் இல்லாத காதலும்!!!

மழலையின் ஓவியம் போல் !

சிலருக்கு கிறுக்கலாகவும்,
சிலருக்கு ஓவியமாகவும்,
காட்சியளிக்கும்....!

நான் கிறுக்கிய என்
காதல் ஓவியம்


என்னவள் நீ...!